Monday, May 18, 2015

User view about Jayalalitha Case !! Must Read and share it !!!

அரசியல் பற்றி அவ்வளவு தெரியாது எனக்கு இருந்தாலும் என்னுடைய கருத்தை பதிவு செய்ய விரும்புகின்றேன் அரசியலுக்கு அப்பார்பட்டு) தமிழக முன்னாள் முதலமைச்சர் மீது ஊழல் வழக்கு பதியப்பட்டதாம் அப்போது எனக்கு வயது 2 தான் ஆதலால் அவர் யார் என்றே எனக்கு தெரியாது..
18 வருடங்களுக்கு பிறகு அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது தமிழகத்தின் முதலமைச்சரை அதுவும் ஒரு பெண்ணை 4 மணி நேரம் நீதிமன்ற கூண்டில் நிற்க வைத்து அன்றே அவரை கைது செய்து சிறையில் அடைத்தது கர்நாடக நீதிமன்றம்.

அப்படி அவர் என்ன செய்தார் என்று பழைய வழக்கு பதிவுகளை இணையத்தில் தேடி படித்து தெரிந்துகொண்டேன்.
நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட எந்த ஒரு நிதியினையும் அவர் ஊழல் செய்ய வில்லை 1000 கோடி 170000 கோடி என்று ஊழல் செய்து நாட்டிற்கு எந்த ஒரு இழப்பையும் அவர் ஏற்படுத்தவில்லை 62 கோடி ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்தினை சேர்த்தார் என்பதே அவர் மீது சுமத்தப்பட்ட புகார்.
நாட்டிற்கு பல கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்திய கயவர்கள் வெளியில் சுதந்திரமாக உலா வர இவருக்கு ஏன் இந்த அதிகபட்ச தண்டனை காரணம் அவர் பெண் அதுவும் தனி ஒரு பெண்.
எனக்கு ஒரு சந்தேகம் அவர் யாருக்காக சொத்து சேர்க்க வேண்டும் ஏதற்காக ஊழல் செய்ய வேண்டும் இதை ஏன் யாரும் சிந்திக்கவில்லை
பல மொழிகள் நடனம் நாடகம் திரைப்படம் என்று அந்த காலத்திலேயே மிகச்சிறந்த நடிகை அவர் கோடிக்கனக்கான சொத்து அவரிடம் முன்பே இருந்திருக்கிறது..
ஒரு தலைவர் ஆக கூடியவர் முன்பே பணக்காரராக இருக்கக் கூடாதா?
சதாரண சேலை காதில் ஒரு சின்ன கல் தோடு கையில் ஒரு சாதரண கடிகாரம் இதுதான் அவரது இயல்பு
அவர் ஒரு சா்வாதிகாரி என்று சொல்கிறார்கள் ஏன் அதில் என்ன தவறு இருக்கிறது தனது ஆட்சியில் யார் தவறு செய்தாலும் அவர்களை ஆட்சி பொறுப்பில் இருந்து தூக்கி வீசுகிறார் அதே சமயம் அடிமட்டத்தில் இருக்கும் சாதரண தொண்டனையும் உயரே கோபுரத்தில் அமர்த்துகிறார். இது சா்வாதிகாரமா? அப்படி என்றால் எனக்கு சா்வாதிகாரி தான் வேண்டும்.
இணையத்தில் அவரது வழக்கை பற்றி படித்தபோது சுவாரசியமான ஒரு செய்தி என்னை ஆச்சிரிய படுத்தியது ஆம் கடந்த ஆட்சி காலத்தில் சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வந்து இந்த வழக்கை முடித்துகொள்ளாம் என சொன்ன போது அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயா எழுத்து பதிலளித்தாராம் ”இந்த வழக்கில் நான் குற்றமற்றவள் என சட்டப்படி வருவேன்” என்று அவர் குற்றவாளியாக இருந்தால் ஏன் இதை செய்ய வேண்டும்.
பாரதி கண்ட புதுமை பெண்கள் என்று நம்மை வாழ்த்தும் இந்த சமூகம் ஏன் முன்னுதாரனமாக இருக்கும் ஒரு பெண்ணை இப்படி இகழ வேண்டும்.
இன்று அவரை குற்றமற்றவர் என மேல் நீதி மன்றம் தீர்பளித்து விடுதலையும் செய்து விட்டது.. ஆனால் அவர் பட்ட அவமானங்களுக்கு பதில் என்ன? ஒட்டுமொத்த தமிழக பெண்களையும் அவமானப்படுத்திய கீழமை நீதிமன்றம் இதற்கு பதில் சொல்லுமா?

No comments:

Post a Comment