Tuesday, March 27, 2012

Save Trees !!!!






ஐயா நம்மாழ்வார் பற்றி தோழர் தியாகு எழுதிய தொகுப்பிலிருந்து சில உங்களுக்காக..!! 
இயற்கை விவசாயப் பயிற்சிக்குப் போனேன்அங்கு ஒரு பெரியவர் வந்திருந்தார்சுற்றுச்சூழல் கழகத்தினுடைய தலைவர் அவர்அவர்என்னிடம் "இனிமேல் உங்கள் நாட்டில் பருவ மழையே பெய்யாதென்றுசொன்னார்இதை அவர் 1987-ல் சொன்னார்.
ஏன் என்று நான் கேட்டதற்கு, "உங்களுடைய மேற்குத் தொடர்ச்சி மலை 3 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கிறதுஅதில் 300 அடி உயரத்திற்குமரங்கள் எல்லாம் இருக்கின்றனஅது அரபிக் கடலிலிருந்து வருகின்ற ஈரக் காற்றையெல்லாம் மேகமாக மாற்றிமழையாக மாற்றி கீழேஇறக்குகிறதுஅந்த மழை நீரை பூமியில் இறக்கி பிறகு ஆற்றில் நீராக ஓடுகிறதுஅந்த மரங்களையெல்லாம் நீங்கள் வெட்டிவிட்டு,இடுப்பளவு உயரமுள்ள "டீதோட்டம் போட்டு விட்டீர்கள்இன்னமும் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்இன்னமும் குறையவே இல்லை அது.அதற்குப் பிறகு முழங்கால் உயரத்திற்கு உருளைக்கிழங்கு செடிகளை நடுகிறீர்கள்ஒரு ஜான் உயரத்திற்கு முட்டைக்கோஸ்காலிஃபிளவர்எல்லாம் பயிர் செய்து கொண்டிருக்கிறீர்கள்அதனுடைய விளைவு அரபிக்கடலிலிருந்து வரக் கூடிய ஈரக் காற்றை மேகமாக மாற்றமுடியவில்லைமழையாக மாற்ற முடியவில்லைஅப்படியே தப்பித் தவறி மழை பெய்து ஓடுகின்ற தண்ணீரைத் தடுத்து நிறுத்தமுடியவில்லைஆகவே எங்குப் பார்த்தாலும் வெள்ளம்ஆகஇனி உங்களுக்கு புயல் மழைதான் வரும்பருவ மழை வருவதற்குவாய்ப்பில்லைஎன்று சொன்னார் அவர்அவர் சொன்ன அன்றிலிருந்து தொடர்ந்து உற்றுக் கவனித்துக் கொண்டுதான் வருகிறேன்அதே தான்நடந்து கொண்டிருக்கிறதுநான் போகின்ற அத்தனை கூட்டங்களிலும் சொல்லிக் கொண்டிருக்கிறேன்நான் எழுதும் அத்தனைகட்டுரைகளிலும் எழுதி கொண்டுதான் இருக்கின்றேன்யாராவது இதை வாசித்து உணர மாட்டார்களாதவறைத் திருத்திக் கொள்ளமாட்டார்களாஎன்றுஆனால் யாரும் யோசித்த மாதிரி தெரியவில்லைதொடர்ந்து காடு அழிக்கப்படுகின்ற செய்தி வந்து கொண்டுதான்இருக்கிறது.