Friday, May 22, 2015

A reason behind Modi's Foreign trip.. Read and Share ..

சீனா இந்தியாவை கண்டு பயப்படவில்லை மோடி என்ற ஒரு தனி மனிதனை கண்டு பயப்படுகின்றது.
மோடி மீது சீனா எரிச்சல் பட காரணம் இதுதான்
.மோடி நாடு நாடாக சுற்றுகிறார் என்று சொல்லுபவர்கள் இதை எல்லாம்...கவனித்து விமர்சிக்கலாம்.
இந்திய பிரதமராக பதவி ஏற்ற மோடி ஜப்பான், வியட்நாம், இலங்கை, நேபாளம் ஆஸ்திரெலியா,பூடான்,மற்றும் மியான்மர் போன்ற வெளி நாட்டு பயணத்தால் ஆசியாவில் சீனாவின் ஆதிக்கம் ஓரளவுக்கு கட்டுபடுதப்பட்டுள்ளது. ஆதலால் இந்தியாவின் மோடியின் மீது கோபம். மோடியால் உலக அளவில் இந்தியாவின் பெருமையும் உள்நாட்டிலும் இந்தியாவும் அசுர வளர்ச்சியை பெற்று கொண்டுவருகிறது.
இலங்கையில் சீனாவின் தயவால் அமையவிருந்த துறைமுகம் தடை மற்றும் அங்குள்ள குருடாயில் டெர்மினலில் உள்ள சேமிப்பு டாங்குகளை (STORAGE TANKS ) புனரமைக்க சீனாவை பின்னுக்கு தள்ளி அதை இந்தியாவிற்கு கிடைக்க செய்து இந்திய நிறுவனமான IOC நிறுவனத்திற்கு அந்த புணரமைப்பு பணியை வழங்கியது என மோடியின் செயல் சீனாவிற்கு எரிச்சலை ஏற்படுத்திஉள்ளது...
அதோடு மோடி இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கில் உள்ள தீவுகளுக்கு சென்று சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தை எதிர்த்தார் உடனே மோடி இந்தியாவின் பருவ பாதை திட்டத்தை உலகிற்க்கு அறிவித்தார் இந்தியா ஆண்மையுள்ள நாடு இது ஆதிக்க சீனாவிற்க்கு பயம் தொற்றிகொண்டது.
மோடி அடுத்து,வியட்நாம் சென்று அங்கு தென் கிழக்கு சீன கடற்ப்பகுதியில் பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்ய முற்பட்ட இயற்க்கை எரிவாயு ( OFFSHORE NATURAL GAS EXPLORATION ) திட்டத்தை எடுக்கும் திட்டம் மற்றும் அதை சார்ந்து கரைக்கு (ONSHORE RECEIVING TERMINAL ) கொண்டு வந்து ஆலை அமைக்கும் திட்டத்தை ஒட்டுமொத்தமாக சீனாவிற்கு கிடைக்காமல் இந்தியாவிற்கு கிடைக்க வைத்தார் மோடி.
மோடி அடுத்து திரும்பவும் தமிழகத்தில் இருந்து வியட்நாமிற்கு கப்பல் போக்கு வரத்து திட்ட ஒப்பந்தம் இடப்பட்டது மோடியின் இந்திய அரசு மிகவும் நுட்பமாக பணிபுரிந்து சீனாவிற்கு செக் வைத்துள்ளார்கள்..
ஒருபுறம் மோடி சீனாவுடன் பேசி கொண்டே இப்படி தைரியமாக செய்கிறார் என்றால் நாட்டின் மீது அவர் கொண்டுள்ள்ள பற்று மற்றும் அர்பணிப்பு தான் மிக முக்கிய காரணம்....இது போன்ற ஒரு தைரியமான நடவடிக்கை இது வரை இந்தியாவில் இருந்த எந்த பிரதமரும் இவ்வளவு தீர்க்கமாக செய்ய வில்லை என்றே கூறலாம்.....
தற்போது தெற்கு சீனா கடற்பகுதியில் சீனா ஆதிக்கம் பெருமளவு கட்டுபடுத்தப்பட்டு உள்ளது..
அடுத்த படியாக மோடி பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் ஆதிக்கம் செலுத்த நினைக்கும் சீனாவை கட்டுப்படுத்த அந்த நாட்டுக்கு சென்று ஒப்பந்தம் நிறைவேற்றினால் கிட்டத்தட்ட சீனாவின் ஆதிக்கம் தென் கிழக்கு சீனா கடற்பகுதியில் 100 % கட்டுப்படுத்தப்பட்டு விடும் என்றே கூறலாம்...கொரியாவுடனோ அல்லது ஜப்பானுடனோ எந்த ஜென்மத்திலும் சீனாவால் மோத முடியாது....
இந்தியா வல்லரசு ஆக வேண்டும் என்று இங்கு அமர்ந்து அரசியல் செய்யாமல் உலகம் முழவதும் இந்தியாவின் மீதான பார்வை மாற்ற வேண்டும் என்று உலகம் முழுவது உறக்க சொல்கிரார்.
இந்தியா பாம்பாட்டிகளின் தேசம் மட்டும் அல்ல உலகையும் ஆட்டுவிக்கும் மோடி வித்தையும் உண்டும்..
இந்தியாவின் வளர்ச்சிக்கு உலக அளவில் உள்ள தொழில் நுட்பங்களை பெற மோடி நாடு நாடாக அலைகிறார்.
இதுவரை நாம் கண்ட பிரதமர்கள் போல் மோடியும் நாட்டிலேயே அமர்ந்து அரசியலும் உழலும் செய்து கொண்டிருக்கலாமே ஏன் அவர் 42 ஆண்டுகளுக்கு பிறகு மோடி முதல் முறையாக கனடா செல்கிறார்.சென்றதால் தானே கனடா இந்தியாவிற்க்கு 5 ஆண்டுகளுக்கு யுரேனியம் தருகிறது அது வந்தால் தானே நம்மால் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.
மோடியின் இந்த அர்பணிப்பு இந்தியாவின் மீது தொலைநோக்கு பார்வை இல்லாதவர்களுக்கும், இந்தியா மீது பற்று இல்லாதவர்களுக்கு, குவாட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் ஒட்டு போடுபவர்களுக்கும், மதத்தில் மூழ்கி தன்னிலை இழந்தவர்களுக்கும்,எந்நாளும் பாஜகவின் தூய்மை புரியாது. இது இந்தியாவின் சாபக்கேடு.
காந்திஜியையும் நேருவையும் போல் இந்தியாவில் அமர்ந்து வெள்ளைகாரனுக்கு ஆதரவாக அரசியல் செய்யாமல் நேதாஜி சுபாஸ் போல் உலக முழுவதும் சுற்றி இந்தியாவிற்க்கு வெளிநாடுகளின் ஆதரவும் முதலீடுகளும் தொழில் நுட்பமும் திரட்டி வருகிறார் மோடி..
இன்று கொள்கை இல்லாதவர்களுக்கு கொடி பிடிக்கும் இளைஞர்களின் திண்ணையும், டீ கடை பெஞ்சும்,எதிர் கால இந்திய இளைஞர்களுக்கு ஒய்வுக்கு மட்டும் பயன்படும்.
மோடி அவர்கள் இந்திய மக்கள் அனைவருக்குமான வளர்ச்சி என்ற மந்திரம் ஒன்றே இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனைகளுக்கு தீர்வு என்பதை நன்றாக உணர்ந்துள்ளார்.அவர் திரட்டிவரும் திட்டங்களும் தொழில்னநுட்பம் சார்ந்த முதலீடுகளும் இந்திய இளைஞர்களுக்கு மிக பெரிய வரமாகும்.
இதை பார்க்கும் ஆசியாவில் வளர்ந்த நாடுடான சீனா தற்போதய இந்தியாவை கண்டு பயப்படவில்லை மோடி என்ற ஒரு தனி மனிதனை கண்டுதான் பயப்படுகிறது மோடி உருவாக்கி வரும் எதிர் கால நவீன இந்தியா சீனாவிற்க்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இன்னும் நமது பிரதமர் மோடி நிகழ்த்தப்போகும் சாதனைகள் பல வகைகளில் இந்தியாவை மென்மேலும் உயர்த்தும்.

No comments: